• Sep 20 2024

“எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது- உறுதி செய்த அமிதாப் பச்சன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கணடறியப்பட்ட வைரஸ் தொற்று நோய் தான் கொரோனா.இது அங்கிருந்து படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவி உலக நாடுகளையே ஸ்தம்பித்தது. இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் இறப்புக்குள்ளானதும் தெரிந்ததே. 

அந்த கொடிய நோய் பரவி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆக உள்ள போதிலும் அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை. அது உருமாறிக்கொண்டே இருப்பதனால் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதும் மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கிறது. 

இந்த கொாரோனாத் தொற்றால் பொது மக்கள் மட்டுமன்றி திரையுலகப் பிரபலங்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதனை அவரே தனது டுவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது. என் அருகில் இருந்தவர்களும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.





Advertisement

Advertisement