விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் மற்றுமொரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கும் கணேஷை பார்க்க அவரது அம்மாவும் அப்பாவும் வருகின்றனர். இந்த நிலையில் 'நீங்க எதுக்கு இங்க வந்திங்க' என கோவமாக கேட்கிறார் கணேஷ். அதற்கு 'நீங்க இங்க என்னடா பண்ற. திடீர்னு ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து வைச்சி இருக்கா' என கணேஷிடம் கேட்கிறார் அவரது அப்பா.
இதையடுத்து, 'அப்புறம் என்ன தெருவிலயா நிக்க சொல்றிங்க' என கூற 'முதல்ல நீ ஊருக்கு கிளம்பு' என கணேஷிடம் சொல்லுகிறார் அப்பா.இதற்கு 'நான் வருவன். அமிர்தாவையும், நிலாவையும் கூட்டிட்டு தான் வருவன்' என விடாப்பிடியாக நிற்கிறார் கணேஷ். எவ்வளவு தான் அவருடைய அம்மா,அப்பா பொறுமையா எடுத்து சொன்னாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளகூடிய மனநிலையில் கணேஷ் இல்லை.
இறுதியாக 'எனக்கு என் அமிர்தா வேணும், என் குழந்தை வேணும் அவர்கள கூட்டிட்டு தான் வருவன்' என சொல்ல, 'அது நடக்காது' என அவரின் அப்பா கூறுகிறார். எனினும் 'நான் நடத்திக் காட்டுவேன்' என கூறுகிறார் கணேஷ்.இத்துடன் இந்த எபிசோட் முடிகிறது.
கணேஷ் ஒரு முடிவோடு தான் இருக்காரு.. 😐
பாக்கியலட்சுமி - இன்று இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/qUjsslIx8G
Listen News!