• Sep 21 2024

இரண்டாவது குழந்தை கட்டாயம் வேண்டும் என்று அடம் பிடிக்கும் அமிர்தா- கடும் கோபத்தில் இருக்கும் கோபி- சந்தோஷத்தில் பாக்கியா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 பாக்கியா சீக்கிரம் வராததால் இனியா கோபித்துக் கொண்டு ஓடி வந்து ரூம் கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்து விடுகின்றார். எல்லோரும் ரூம் கதவைத் தட்டியும் இனியா தனக்கு யார் கூட பேசவும் விருப்பமில்லை என்கின்றார். பின்னர் எழில் அம்மா அழுகிறா பாரு இனியா கதவைத் திற என்று சொல்ல இனியா கதவைத் திறக்கின்றார்.


அப்போது உள்ளே வந்த பாக்கியா இனியாவிடம் மன்னிப்புக் கேட்கின்றார். அதன் பின்னர் கல்யாண வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றார். ராமமூர்த்தியும் நடந்ததைச் சொல்ல வீட்டில் இருக்கிறவங்க எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள். நடந்ததைக் கேட்டு இனியாவும் சமாதானமாகின்றார்.

மறுபுறம் வீட்டுக்கு வரும் கோபி மற்றும் ராதிகாவிடம் பங்சனில் ஏதும் பிரச்சினை நடந்திச்சா என்று ராதிகாவின் அம்மா விசாரிக்க ராதிகா என்னை யாரும் திட்டல ஆனால் பாக்கியா தான் பங்சனுக்கு வரல என்று சொல்கின்றார். இதனால் கோபமடைந்த கோபி அவளுக்கு இப்போ என் குடும்பத்தை விட சமையல் சமையல்னு அந்த பழனிச்சாமியுடன் ஊர் சுற்றுவது தான் வேலையாக போச்சு எனத் திட்டுகின்றார்.

அப்போது ராதிகாவின் அம்மா யார் அந்த பழனிச்சாமி என்று கேட்ட ராதிகா அது பாக்கியாவுடன் ஸ்போக்கின் இங்கிலிஸ் கிளாசுக்கு போறவரு கோபி சொல்லுற மாதிரி எதுவும் இல்ல, அப்பிடி என்ன இருந்தாலும் நமக்கு என்னம்மா என்று சொல்கின்றார். இருந்தாலும் யாரையும் நம்பக் கூடாது என்று  ராதிகாவின் அம்மா சொல்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் எழிலுக்கு அடிக்கடி போன் வந்து கொண்டிருப்பதாகவும் எல்லோரும் எடுத்து இனியா பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறாங்க என் அமிர்தாவிடம் சொல்கின்றார். பின்னர் தொடர்ந்து அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து கேட்கின்றார். அதற்கு எழில் நமக்கு நிலா மட்டும் போதும் இன்னொரு பாப்பா பிறந்தால் வீட்டிலிருக்கிறவங்க நிலாவை வேற மாதிரி நடத்தினால் நிலாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் அதனால் இன்னொரு குழந்தை வேணாம் ஜாலியாக இருப்போம் என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.

தொடர்ந்து பாக்கியா இனியாவிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றார். உனக்கு என்ன பிடிக்குதோ அதைப் படி நீ பெரிய உச்சத்திற்கு போகனும் இது தான் என்னோட ஆசை என்று சொல்லி இனியாவை முத்தமிடுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement