• Sep 20 2024

இன்னொரு குழந்தைக்கு ஆசைப்படும் அமிர்தா, மறுப்புத் தெரிவித்த எழில்- கோபிக்கு குட் நியூஸ் சொன்ன ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொணடிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா ஆங்கில வகுப்பில் பழனிச்சாமியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பழனிச்சாமி இன்டைக்கு டெஸ்ட் இருக்கு எப்பிடித் தான் செய்யப்போறமோ தெரில என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார். அப்போது டீச்சர் வந்து கிளாஸ் எடுக்க பழனிச்சாமி எக்ஸ்ஷாம் வைப்பதாக சொன்னதை சொல்ல டீச்சருக்கும் நினைவு வந்து எக்ஸ்ஷாம் வைக்கின்றார்.


தொடர்ந்து வீட்டில் அமிர்தாவின் மாமியார் அமிர்தாவிடம் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் எப்பிடி உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா என்று கேட்க அமிர்தாவும் எல்லோரும் தன்னுடன் நன்றாகப் பேசுவதாகச் சொல்கின்றார். அப்போது அவர் உங்களுக்கென்று ஒரு குழந்தை பெத்துக்கோங்க, அப்போ தான் இந்த வீட்டில உனக்க என்று ஒரு உரிமை இருக்கும் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்டு அமிர்தா என்னசெய்வது என்று தெரியாமல் யோசிக்கின்றார். தொடர்ந்து ஆங்கில வகுப்பில் பாக்கியாவிடம் கேட்டு கேட்டு பழனிச்சாமி எக்ஸ்ஷாம் செய்கின்றார்.பின்னர் எக்ஸ்ஷாம் முடிந்ததும்  பாக்கியாவிடம் எப்பிடி இவ்வளவு பிரச்சினையிலும் உங்களால் படிக்க முடியுது என்று கேட்க பாக்கியா எல்லாத்துக்கும் நாம தான் டைம் எடுத்துக்கணும், சமைக்கும் போது படிச்சது எல்லாத்தையும் நினைவுபடுத்தி பார்ப்பேன் என்று சொல்கின்றார்.

 தொடர்ந்து எழில் வீட்டுக்கு வந்ததும் எழிலிடம் இன்னொரு குழந்தை பெத்துக்கொள்வோமா என்று அமிர்தா கேட்கின்றார். அதற்கு எழில் நமக்கு நிலாமட்டுமே போதும். அப்பிடி சொல்லி தானே கல்யாணம் பண்ணிக் கிட்டோம். நிலாவை நல்ல படியா வளர்க்கனும் யார் என்ன சொன்னாலும் நீ கவலைப்படாத நிலா பாப்பா மட்டுமே போதும் என்கின்றார்.


இதனால் அமிர்தா என்ன செய்வது என்று யோசிக்கின்றார். பின்னர் வீட்டுக்கு வரும் ராதிகா தனக்கு ப்ரமோஷன் கிடைத்திருப்பதாக சொல்லி சந்தோஷப்படுகின்றார். அத்தோடு சம்பளமும் இரண்டு மடங்காக கூட்டியாச்சு என்று சொல்கின்றார். அப்போது கோபி பாராட்டுகின்றார். பின்னர் கோபி நான் வெளில போய்ட்டு வாரேன் வேலை இருக்கு என்று சொல்லி கிளம்ப ராதிகா குடிக்கப் போறீங்களா குடிச்சிட்டு வந்தால் அப்பிறம் நடக்கிறதே வேற என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 


Advertisement

Advertisement