• Sep 20 2024

ஈஸ்வரிக்கு தெரியவந்த எழில், அமிர்தா காதல்..பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ருவிஸ்ட்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்த தொடரில் மனைவியை ஏமாற்றும் கணவன் எப்பொழுது சிக்குவார் என்பதே தற்பொழுது ஒளிபரப்பாகி வருகின்றது.இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்….

பாக்யா வெளியே போவது போல் போய் மாமனாரின் பிறந்தநாள் விழாவிற்கு பலரையும் வரவேற்கிறார். பின்னர் செல்வி வெளியே இருக்கிறவங்களுக்கு சொல்லிட்டியா என கேட்க உடனே தனத்திற்கு போன் செய்து அழைப்பு விடுக்கிறார். மேலும் மாமாவுக்கு உடம்பு சரியில்லாததால் எல்லோரும் வந்தா சந்தோஷப் படுவார் என சொல்ல என்னாச்சு என தனம் கேட்க பக்கவாதம் வந்து வாய் பேச முடியாமலும் ஒரு பக்கம் கை கால் விழங்காமல் இருப்பது பற்றி கூறுகிறார். பிறகு தனம் கண்டிப்பா நான் வீட்ல எல்லோரிடமும் சொல்லி வர முயற்சி செய்கிறோம் என சொல்கிறார்.

அதன்பிறகு கோபி ராதிகா வீட்டுக்குச் செல்ல மயூ படித்து முடித்துவிட்டு மேலே எழுந்து சென்று விடுகிறார். பின்னர் கோபி காலையில் ஏன் ஒரு மாதிரி பேசினா கோவமா இருக்கிற மாதிரி இருந்தது ஏன் என்னாச்சு என கேட்க நீங்க தான் நைட்டு பேசணும்னு ஆரம்பிச்சுட்டீங்க. ஆனா ஒரு வாரமா என்கிட்ட நீங்க சரியா பேசுறது இல்லை.உண்மையச் சொல்லுங்க என்ன பிரச்சனை என கேட்க பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை .ரூம்ல சரியா டவர் கிடைக்கல. அதனால் பேச முடியல என கூறுகிறார்.

அத்தோடு பாக்கியா தனது மகளை டார்ச்சர் செய்வதாக சொல்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வரும் போது அவளையும் கூட்டிட்டு வந்து விடுவேன் என சொல்ல ராதிகா அம்மா இல்லாம இருப்பாளா என கேட்கிறார். என்னைப் பார்த்துக்க மாட்டியா என கோபி கேட்க அதெல்லாம் பாத்துப்பேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் எழில் அமிர்தாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டு ஸ்வீட் செய்து கொடுக்கிறார். ஈஸ்வரி எழிலிடம் நீ அடிக்கடி அமிர்தா வீட்டுக்கு போறீயா என கேட்க ஆமாம் வாரத்துல இரண்டு இல்லை என்றால் மூணு நாள் போயிடுவேன்.

அப்பா அம்மா நிலா பாப்பாவ பார்க்காமல் இருக்க முடியாது அவங்களும் என்ன பாக்காம இருக்க மாட்டாங்க என கூறுகிறார்.

பின்னர் இருவரும் மீது படிக்கட்டில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது செழியன் கீழே இறங்கி வந்து ஈஸ்வரியிடம் இருவரும் காதலிக்கிறார்கள் போல நான் பலமுறை எழிலிடம் இதெல்லாம் செட் ஆகாது என சொல்லி விட்டேன் ஆனால் அவன் கேட்கவில்லை. காலையில் விடிந்ததும் ராத்திரி நேரம் என எப்போதும் அந்த பொண்ணு கிட்ட தான் பேசிட்டு இருக்கான் என சொல்கிறார்.நீங்க அவன் கிட்ட பேசுங்க என சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்டு டென்ஷனான ஈஸ்வரி பாக்கியாவை அழைத்து அமிர்தாவை அனுப்பலையா என கேட்கிறார். பிறகு வெளியில் வர அந்த பொண்ணு கிளம்பலையா எனக் கேட்க அவங்களும் கிளம்பிட்டாங்க.சொல்லிட்டு இருந்தாங்க என கூற பிறகு எழில் அமிர்தாவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement