தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.அனைத்து போட்டியாளர்களையும் கலகலவென வைத்திருந்த அமுதவாணன், Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக Finale வாரத்துக்கு முன்னேற்றம் கண்டிருந்தார்.பின்னர் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தன்னை ஒரு சிறந்த காமெடியன் மற்றும் கலைஞனாக முன்னிறுத்திய அமுதவாணன், சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய காமெடி திறமை மூலம் தொடர்ந்து பலரையும் சிரிக்க வைத்ததுடன் மட்டுமில்லாமல், பல பார்வையாளர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார்.
இந்த நிலையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய இடங்களில்,அசீம் ஏதாவது எகிறி பேசினால், நீங்கள் மௌனம் ஆகி விடுவதாகவும், அசீம் என்றால் பயமா என்ற கேள்வியும் அமுதவாணன் முன்பு வைக்கப்படுகிறது. இதற்கு பதில் சொல்லும் அமுதவாணன், "யார் மேலையும் எனக்கு பயம் எல்லாம் கிடையாது. மரியாதை வேணா குடுப்பேனே தவிர பயம் கிடையாது.
அவர் கத்துனா நான் திருப்பி கத்தணும்னு அவசியம் கிடையாதுல்ல. நார்மலா சொல்லிப் பார்த்தேன் மீறி கத்தினா, பாக்குறவங்களுக்கு நல்லா இருக்காது அது எனக்கே பிடிக்காது. அசீம் இல்ல, விக்ரம்னுக்கும் எனக்கும் சண்டை வரும் போது கூட, ஒரு லெவல் அப்புறம் பேசுனேன், அதுக்கப்புறம் அவரும் கத்த ஆரம்பிச்சிடுவாரு. அப்பகூட நானும் என்ன கேக்கணும்ன்னு நினைச்சேனோ அதைத்தான் சொன்னேனே தவிர, கத்தல.
சில பேர் கோபத்துல என்ன பேசணும்னு தெரியாமல் பயங்கரமா கத்திட்டு இருப்பாங்க. நான் நிறைய தடவை அசீம்கிட்ட சொல்லுவேன், எதுக்கு அசீம் கத்திட்டே இருக்கன்னு. ரெண்டு, மூணு நேரத்துல திட்டுனாப்ல. அப்போ ஒரு தடவை அசீம கூப்பிட்டு, 'எனக்கு உன்னை புடிக்கும். இங்க நான் சண்டை போடுறதுக்காக எல்லாம் வரல. ஜாலியா வந்து காமெடி பண்ணிட்டு 100 நாள் இருந்துட்டு போகணும்ன்னு நினைக்குறேன்'ன்னு சொன்னேன்" என விளக்கம் அளித்துள்ளார்.
Listen News!