• Sep 20 2024

மணிகண்டனால் தேம்பித் தேம்பி அழுத அமுதவாணன்- யப்பா இன்னும் என்னெல்லாம் பண்ணப் போறாங்களோ தெரியலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!


21 போட்டியாளர்களுடன் மிகவும் பிரமாண்டமாக விஜய் டிவியில் கடந்த மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் மகேஷ்வரி இல்லது ராம் வெளியேறுவார என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பேக்கரி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அமுதவாணன் தலமையில் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற அணியும் விக்ரமன் தலமையில் அட தேனடை என்ற அணியும் பிரிந்து விளையாடி வருகின்றனர்.


இதில் ரேம்ப்பில் வரும் பொருட்களை யார் முதலில் கைப்பற்றுகிறார்களோ அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடியும்.இதனால் இரு அணிகளிலும் இருப்பவர்களுக்கிடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது மணிகண்டன் இழுக்கும் போது அமுதவாணன் கீழே விழுந்து விட்டார்.


இதனால் கடுப்பான அமுதவாணன் அழுது கொண்டிருந்ததோடு மணிகண்டனிடம் நீ என்னை வேணும் என்றே இழுத்து விட்டாய் இப்படிப் பண்ணாத என்று கூறுகின்றார். இதற்கு கடுப்பான மணி நான் இதை வேணும் என்று பண்ணல சும்மா சின்னப்பிள்ளை மாதிரி நீங்க பண்ணாதீங்க இது என்னோட ஸ்ராட்டஜி. தெரியாமல் பட்டிருக்கும் உங்களை வேணும் என்றே இழுத்ததாக சொல்லாதீங்க ரொம்ப மன்னிச்சிருங்க என்றும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அமுதவாணன் பிக்பாஸிடம் பேசி மெடிக்கல் ரூமுக்குள் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement