தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதியில் அசீம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில் இதில் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி இருந்தார். இதில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருந்தவர் தான் அமுதவாணன்.
இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணப்பெட்டியில் இருந்த 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறிய அமுதவாணன் முதல் முறையாக லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் கேரக்டர் பற்றியும் அமுதவாணன் ரசிகர்களோடு பேசி இருக்கிறார். அதில் ஆரம்பத்தில் விக்ரமனுக்கும் எனக்கும் அதிகமாக சண்டை வந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் சண்டை போட்டாலும் சிறிது நேரம் கழித்து மீண்டும் யார் மீது தப்பு என்பதை பேசி சமாதானம் ஆகி இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் வெளியேயும் இதுதான் நிலைமையாக இருக்கிறது. ஒரு நல்ல நண்பரோடு என்னால் தொடர்ந்து நட்பாகவே இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி பின்பு ஒரு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு கடைசியில் முடிவில் நல்ல நட்பை அவர்களும் உணர்ந்து விடுவார்கள். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் பிக் பாஸ் வீட்டிற்கும் நடந்தது ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி பின்பு எனக்கும் விக்ரமனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் தொடங்கியது. ஆனால் பின்பு நாங்கள் இருவரும் பேசிய பிறகு அது சரி செய்யப்பட்டது.
நான் வெளியே வரும்போது கூட எனக்காக விக்ரமன் அழுது இருந்தார். இது எங்களுடைய நட்புக்கு கிடைத்த வெற்றி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் எனக்கு போன் செய்து நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சம்பாதித்த ஒரு உண்மையான நட்பு என்று கூறினார். அதுபோல அசீம் பார்ப்பதற்கு தான் கரடு முரடாக இருப்பார். ஆனால் யாருக்கு எந்த உதவி என்றாலும் முதல் ஆளாக செய்வார். அசீம் கோபப்படும் போது அவர் செய்வதை பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி என்று வந்துவிட்டால் அவரை மிஞ்ச யாரும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் அமுதவாணனும் ஜனனியையும் நட்பாக பழகுவதையும் பற்றி அமுதவாணன் பல இடங்களில் ஜனனி எனக்கு ஒரு சகோதரி மாதிரி தான் வேறு எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருந்தாலும் அவரைப் பற்றி பலர் பொதுவெளியில் குறிப்பாக youtube சேனல்களிலும் வீடியோக்களிலும் தவறாக சித்தரித்து வந்திருக்கின்றனர். அதுக்கு முதல் முறையாக அமுதவாணன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். எது உண்மை என்று தெரியாமல் சிலர் தங்களுக்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அடுத்தவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஆனாலும் எனக்கு ரசிகர்களும் நண்பர்களும் அதிகமானோர் ஆதரவு தந்து என்னை நம்புகின்றனர். அது எனக்கு போதும் என்று கூறி இருக்கிறார்.
Listen News!