• Sep 21 2024

கோபத்தில் கிளம்பிய குணசேகரன்.. கதறிக் கண்ணீர் வடிக்கும் ஆதிரை.. சக்திக்கு மறுப்புத் தெரிவித்த ஜனனி.. பரபரப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது தினந்தோறும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.


அதில் குணசேகரன் ஆதிரையைப் பார்த்து "முடிஞ்சால் கையெழுத்து வாங்கிட்டு வா, கையெழுத்து வாங்க முடியலயா, கல்யாணமும் வேணாம், நிச்சயமும் வேணாம்" எனக் கூறிக் கிளம்புகின்றார். அதற்கு ஆதிரை அழுது கண்ணீர் வடிக்கின்றார். மேலும் அப்புத்தா எல்லாவற்றையும் பார்த்த படியே மனதிற்குள் சிரிக்கின்றார். அவர் எடுக்கப் போகும் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை,


மறுபுறம் சக்தி ஜனனியிடம் "அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சிடிச்சு" எனக் கூறுகின்றார். அதற்கு ஜனனி "இல்ல ஒன்னும் முடியல, நீ வா" எனக் கூறி மறுப்புத் தெரிவித்து விட்டு சக்தியை அழைத்து செல்கின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement