• Sep 20 2024

தந்தையை அடக்கம் செய்த பின்னர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் போட்ட முக்கிய பதிவு

stella / 8 months ago

Advertisement

Listen News!


நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். 

திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலர் தேமுதிக அலுவலகத்திலும், தீவுத்திடலிலும் வந்து விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.மேலும் அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் அவர், "உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டிக்கிறது".


"இந்த கடுமையான நேரத்தில், உங்களுடைய எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement