ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. இரண்டு மாதங்கள் களைகட்டிய ஐபிஎல் திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில், கடந்தாண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.கடந்த மே 28-ந் தேதி இந்த இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் அன்றைய தினம் மழை பெய்து ஆட்டம் நடக்காததால், ரிசர்வ் டே முறையில் நேற்று அப்போட்டி நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி சென்னை வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து. 215 ரன்கள் என்கிற கடின இலக்கை நிர்ணயம் செய்து இருந்தது.இதையடுத்து சென்னை அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கும் 171 ஆக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த கடின இலக்கை அதிரடியாக விரட்டிய சென்னை அணி, கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது. இதனால் பிரபலங்கள் , ரசிகர்கள் எனப் பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் விஜய் டிவி காமெடியனான தங்கதுரை ஓர் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் ஜடேஜா பவுன்ரி அடித்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டோனியை ஓடி வந்து கட்டிப்பிடிக்க டோனி ஜடேஜாவைத் துாக்குகின்றார். இந்த எமோஷனலான வீடியோவைத் தான் பகிர்ந்து எப்பவும் மறக்க முடியாத தருணம் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண் கலங்குகின்றதே எனப் பதிவிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!