நடிகை சதா நடிப்பை தாண்டி அவர் தற்போது செய்யும் தொழில் பற்றி வெளியாகி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற திரையுலக நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சதா. இவரது தாய்மொழி மராத்தி ஆனாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து கலக்கியிருந்தார். இவர் 2003-ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் இவரோடு இணைந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்படத்தில் தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் 'ஜெயம்' படத்திற்கு பிறகு சதாவிற்கு பிரம்மாண்ட இயக்குநரான சங்கர் இயக்கத்தில் 'அந்தியன்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதிலும் தனது சிறப்பான நடிப்பினையே வெளிப்படுத்தி இருந்தார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து 'வ ர்ண ஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலிவேசம், எலி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான திரைப்பட வாய்ப்புக்கள் எதுவும் இவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.அவ்வாறு இருக்கையில் டார்ச்லைட் படத்தில் விலைமாதுவாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
இதன்பின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வாய்ப்பிற்காக காத்திருந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் போட்டோகிராஃபி பக்கம் சென்ற சதா காடுகளுக்கு சென்று விலங்குகளை புகைப்படம் எடுக்கும் பணியை செய்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, தெலுங்கு சினிமாவில் AHIMSA என்ற படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ளது.
Listen News!