சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆனந்தி கயலிடம் தன் செயினைக் காணவில்லை எனவும், போலீஸ் கையில் கிடைச்சால் மாட்டினோம் எனக்கூறி கதறி அழுகின்றார். பதிலுக்கு கயல் "வாயை மூடு நான் போய் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வாறேன்" எனக் கூறிவிட்டுச் செல்கின்றார்.
மறுபுறம் செயினைத் தேடிச் சென்ற கயல் போலீஸ் நிற்பதைக் காண்கின்றார். மேலும் அவர்கள் "எனக்கு கயல் மேல தான் சந்தேகமாக இருக்கு, பிரபு காணாமல் போனதிற்கும் கயலிற்கும் சம்மந்தம் இருக்கு" என்கின்றனர். இதனைக் கேட்டதும் கயல் அதிர்ச்சி அடைகின்றார்.
இதனையடுத்து என்ன நிகழப்போகிறது, கயல், ஆனந்தி போலீசிடம் மாட்டிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!