• Sep 20 2024

தனது சொந்தக் குரலில் முதல் முறையாக டப்பிங் பேசிய ஆண்ட்ரியா- அட இந்தப் படத்துக்குத் தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் தான் நடிகை ஆன்ட்ரியா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி இருக்கின்றார். அந்த வகையில் இறுதியாக புஷ்பா படத்தில் வெளியாகிய ஊ சொல்லுறியா தாதா என்னும் பாடலைப் பாடி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார். அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து தற்போது பிசாசுபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நடிகை ஆண்ட்ரியாஇரண்டாம் பாகத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். தற்பொழுது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆண்ட்ரியா 'பிசாசு 2' படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். அவர் தெலுங்கில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement