தமிழ் சினிமாவில் பாடகி, நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார்.நன்றாக இவரின் மார்க்கெட் ஏறிய சமயம் திடீரென தனக்கு ஏற்பட்ட காதல் மன உளைச்சல் காரணமாக சினிமாவில் பிரேக் விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வட சென்னை படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.
. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், அடுத்ததாக 'அறம்' இயக்குனர் கோபி நாயனாரின் 'மனுசி' படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த ஆண்டின் கடைசி புகைப்படங்கள் என கூறி சில கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறன.
Listen News!