இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் பிசாசு.இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் மிஷ்கின் இயக்கியுள்ளார்.இப்படமும் த்ரில்லர் படமாகவே உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் புரரெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.அத்தோடு இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால் இப்போது சொன்ன தேதியில் படம் ரிலீஸாகாது என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு & ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்ட எந்த ப்ரமோஷன் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் படம் தள்ளி வைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் அறிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் “இப்போது நாங்கள் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம். ஏனென்றால் இது ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அந்த படத்தைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.
Listen News!