• Sep 20 2024

வெள்ளை உடையில் நீரில் மிதந்து வரும் அனிகா..கூடவே ரம்புட்டானுமா…கலாய்க்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகள் என்ற வரிசையில் இடம்பிடிப்பதற்காக முயன்று வருகின்ற ஒருவரே நடிகை அனிகா சுரேந்திரன். இவர் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அனிகா தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அறிமுகமானார்.

அப்படத்தினைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” என்ற படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் 'விஸ்வாசம்' படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து தனது திறமையினை மென்மேலும் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறாக படங்களில் கதாநாயகர்களின் மகளாகவும், தங்கையாகவும் நடித்து வந்த இவர் தற்போது படங்களில் ஆனால் கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். அதற்காக சில ஷார்ட் பிலிமில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அனிகா.

எனினும் இவரது நீண்டநாள் ஆசை வெள்ளித்திரையில் கதாநாயகியாக வரவேண்டும் என்பது தான். இதற்காக 17 வயதே ஆன நிலையிலும் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

அதேபோன்று தற்போது வெள்ளை நிற ஆடையில் குளத்தில் அமர்ந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அத்தோடு அவருக்கு அருகில் ரம்புட்டான் பழமும், வெள்ளை அல்லியும் இருக்கின்றன. அதனை பார்த்த ரசிகர்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.

அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அதுமட்டுமன்றி இந்த வயசிலும் அனிகா சுரேந்திரன் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது அவரது ரசிகர்கள் பலரது மனங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement