• Sep 20 2024

பூமி ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த புடைவையை எரித்த அஞ்சலி- கதறி அழுத முத்தழகு- பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் தற்போது வெளியாகி வரும் முக்கிய சிரியல்களில் ஒன்று முத்தழகு சீரியல். அதில் ஹீரோவாக ஆஷிஷ் சக்கரவர்த்தி மற்றும் ஹீரோயினாக ஷோபனா ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே மலரும் காதல் தற்போது ரொமான்ஸை எட்டியுள்ளது.

இதில் கதாநாயகனான பூமி முத்தழகு, அஞ்சலி என்ற இரு பெண்களை தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக திருமணம் செய்துள்ளார். இதில் யாரை தன்னுடைய விருப்பத்திற்குரிய மனைவியாகத் தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பூமி முத்தழகிற்காக புதிய புடைவையை வாங்கி அதனை பூஜையில் வைக்கின்றார். இதனைப் பார்த்த அஞ்சலி கோபமடைந்து அந்த புடைவையை எடுத்துக் கொள்கின்றார். பின்னர் தனியாகச் சென்று அந்த புடைவையை எரிக்கிறார். 

இதனைப் பார்த்த முத்தழகு தடுத்தும் அஞ்சலி முத்தழகை தள்ளி விடுகின்றார்.இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement