தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள்மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் மதிய நேரத்தில் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் முத்தழகு விவசாயம் பார்க்கும் பெண் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் ஊர்த்தலைவியின் மகனான பூமியைத் திருமணம் செய்திருக்கின்றார்.
சில நாட்கள் தனது கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார் முத்தழகு. இருப்பினும் பூமி, தான் இறந்து விட்டதாக நினைத்த அவரது முதல் மனைவியான அஞ்சலி மீண்டும் வந்து விடுகின்றார்.
இதனால் பல பிரச்சினைகளை சந்தித்த பூமி எந்த மனைவியுடன் சேர்ந்து வாழப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பூமியும் அஞ்சலியும் வெளியூரில் ஜாலியாக இருந்து விட்டு வருகின்றனர். இவர்கள் இப்படி ஜாலியாக இருந்து விட்டு வீட்டிற்கு வரும் போது அஞ்சலி நாம இப்பிடி வெளில போய் ஜாலியா இருந்திட்டு வருவதற்கு முத்தழகு போட்ட சவால் தான் காரணம் என்கின்றார். இதைக் கேட்ட பூமி முத்தழகிடம் சென்று நேராகக் கேட்கின்றார். இதைக் கேட்ட முத்தழகு அதிர்ச்சி அடைகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!