தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் அஞ்சலி. இவர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு இவரின் திருமணம் நடக்கும் என்று ஏற்கெனவே தகவல் ஒன்று வெளிவந்திருந்தது.
இந்நிலையில் தற்போது அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் ஜெய்யை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் அஞ்சலி அதனை மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து பின்னர் பிரபல இயக்குநர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பேசினர். ஆனாலும் இந்த தகவலும் உண்மை இல்லை என்று அஞ்சலி கோபத்துடன் கண்டித்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் இவரின் திருமண பேச்சு கிளம்பி உள்ளது. '
அதாவது அஞ்சலியின் பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள அஞ்சலியும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் இந்த தகவலுக்கு முன்பு போல் அஞ்சலி மறுப்பு எதுவும் சொல்லாமல் மௌனமாக இருப்பதால் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் நம்ப தொடங்கி உள்ளனர். அத்தோடு அஞ்சலிக்கு முற்கூட்டிய திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!