• Sep 21 2024

விஜயாவிடமிருந்த வீட்டுப் பத்திரத்தை மீனாவிடம் கொடுத்த அண்ணாமலை- கடும் கோபத்தில் விஜயா எடுத்த முடிவு- Siragadikka Aasai Promo

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் விஜயா வீட்டுப் பத்திரத்தை அடைவு வைத்து ரோகினிக்கு பார்லர் வைத்துக் கொடுத்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலை தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை பணம் கட்டி மீட்டு விடுகின்றார். அதை வீட்டுக்கு கொண்டு வந்து மீனாவிடம் கொடுக்கின்றார்.


அத்தோடு இனிமேல் உன்னை நம்ப முடியாது விஜயா, இந்தப் பத்திரம் மீனாவிடமே இருக்கட்டும் என்கின்றார்.அத்தோடு முத்துவும் பத்திரத்தை வாங்கி கவனமாக வை என்கின்றார். மீனாவும் அந்தப் பத்திரத்தை தன்னுடைய ரூமுக்குள் வைக்கப்போகின்றார்.

அந்த நேரம் கடுப்பான விஜயா, எல்லாரும் உன் பக்கம் நிற்கிறாங்க என்று தலைக் கணத்தோட இருக்காத, இதுக்கெல்லாம் சேர்த்து உனக்கு ஒரு நாள் இருக்கு என்று திட்டி விட்டுப் போகின்றார். இதைக் கேட்டு மீனா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement