திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாகவே அடுத்தடுத்து பல திடீர் உயிரிழப்புக்கள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இதனையடுத்து தற்போது இந்தி நடிகர் ஒருவரும் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். அதாவது பிரபல இந்தி திரைப்படமான ‘ஷோலோ’வில் நடித்த நடிகர் பீர்பால் கோஸ்லா என்பவர் தான் தன்னுடைய 84-ஆவது வயதில் காலமானார்.
1975ம் ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்ற இந்த திரைப்படமானது இவருக்கு ராசிகர்கள் மத்தியில் பேரினையும் புகழினையும் பெற்றுக் கொடுத்தது. இந்தி மட்டுமல்லாது மராத்தி, போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அத்தோடு அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் முதுமை காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Listen News!