• Sep 20 2024

மெளனராகம் சீரியலில் இணைந்த மற்றுமொரு நடிகை- இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் மெளன ராகம் சீரியலும் ஒன்று. சீசன் 1-ன் வெற்றியைத் தொடர்ந்து சீசன் 2 ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக, பரபரப்பான பல திருப்பங்களும், உண்மையும் தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த சீரியல் முடியப்போகின்றதா எனப் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.அத்தோடு  இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் வரப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த சீரியலில் புதிதாக பிரபல நடிகையும் இணைந்துள்ளார். அந்த சீரியலில் ஷாலினி, கதாப்பாத்திரத்தில் நடிகை ரேஷ்மா நாயர் கமிட்டாகியுள்ளார். அந்த எபிசோட்கள் இன்று முதல் ஒளிப்பரப்பாகியுள்ளது.


இனிமேல், சீரியல் கலைக்கட்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அத்தோடு சக்தி தனது மாமியாரை கடத்தி வைத்திருந்தது சீலா தான் என்பதையும் கண்டு பிடித்து விட்டார். இனிமேல் என்ன நடக்கப் போகின்றது எனக் காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement