தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 11ம் தேதி திரைப்படம் துணிவு திரைப்படம் பிரம்மாண்டமாக வெளிவந்திருந்தது.
இப்படம் வெளிவந்த முதல் நாளில் அஜித் ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வெளியில் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ,பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அனைவருக்கும் மற்றொரு அதிர்ச்சியை கொடுக்கும் விஷயம் நடந்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த வீரபாகு என்பவர் திவீர அஜித் ரசிகராக இருந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திரையரங்கிற்கு துணிவு படத்தை பார்க்க சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர் மது அருந்திவிட்டு திரையரங்கிற்கு வந்துள்ளார்.
இதை கவனித்த பவுன்சர்கள் வீரபாகுவை திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய குடும்பத்தினர்கள் முன் தரக்குறைவாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதன்பின் வீரபாகுவை தவிர்த்து குடும்பத்தினர்களை படம் பார்க்க சம்மதித்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன வீரபாகு திரையரங்கத்தில் இருந்து தனது வீட்டிற்கு சென்று, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வீரபாகு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை குறித்து தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!