தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் தனது கவர்ச்சி நடனத்தினாலும் நடிப்பினாலும் ரசிகர்களில் கவனத்தை ஈர்த்தார்.
கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை, சிங்கக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை தமிழ் திரைப்படமாக எடுக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே பாலிவுட்டில் தி டர்ட்டி பிக்சர் எனும் பெயரில் இந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு புனைவு கலந்து உருவாக்கப்பட்டது. இந்த படத்துக்காக வித்யா பாலன் தேசிய விருதும் பெற்றார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சில்க் ஸ்மிதாவின் இளமைக் கால வாழ்வை மட்டும் உருவாக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!