• Sep 20 2024

அப்பத்தாவிற்கு குணசேகரனால் வந்த மற்றோர் ஆபத்து... மனைவியின் உடலிற்குத் தீ வைத்த ஜீவானந்தம் .. ஜனனிக்குத் தெரிய வந்த உண்மைகள்... சூடுபிடிக்கும் Ethirneechal promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.


இந்நிலையில் இன்றைய தினம் இந்த சீரியலில் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் அப்பத்தாவை ரூமில் போட்டு அடைத்து வைத்துள்ளார். இதனால் நந்தினி கடுப்பாகி அப்பத்தாவை எதற்கு ரூமில் போட்டு அடைத்து வைத்துள்ளீர்கள் எனக் கேட்கின்றார். பதிலுக்கு குணசேகரன் "குணசேகரனை பற்றி யாருக்கும் தெரியாது, பேசாமல் நில்லுங்க" என்கிறார். 


மறுபுறம் ஜீவானந்தம் இறந்த தனது மனைவியின் உடலிற்கு தீ வைத்து விட்டு கண் கலங்கி நிற்கின்றார்.


அவரிற்கு அருகில் வந்த ஜனனி "இப்போ ஒரு விஷயம் எனக்கு தெளிவாகத் தெரியுது, நீங்க தப்பானவர் இல்லை" என்கிறார். அதற்கு ஜீவானந்தம் " இப்போ கூடி உனக்கு தெரிஞ்சது முக்கால்வாசி உண்மைகள் தான்" என்கிறார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement