தென்னிந்திய சினிமாவில் தனது அழகாலும், நடிப்பாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்ட ஒருவரே நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மயோசிடிஸ் என்ற அரியவகை தசை அழற்சி நோயால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக சமீபத்தில் யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் கூறி கண்கலங்கி கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாது அப்படத்தின் டப்பிங்கை கூட அவர் மருத்துவமனையில் இருந்தபடி செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் சமந்தாவுக்கு மறுபடியும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனித் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் அவர் நலம்பெற வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது தற்போது மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் சமந்தாவையும், அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவெனில் அவர் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாகி வெற்றிபெற்ற யசோதா திரைப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஏனெனில் இப்படத்தில் வாடகைத் தாய் முறை பற்றி விவாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படம் முழுக்க ஐதராபாத்தில் உள்ள EVA என்கிற மருத்துவமனையை மையமாக வைத்துத் தான் எடுக்கப்பட்டு இருந்தது.
அதில் தங்கள் மருத்துவமனையை படக்குவினர் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி அம்மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தான் இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டு இருக்கின்றது.
இவ்வாறு அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் சமந்தாவை நோக்கி வருவதால் அவரை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அப்செட் ஆக்கி சோகத்தில் முழ்கடிக்கச் செய்துள்ளது.
Listen News!