• Sep 20 2024

குணசேகரனை குத்திக் காட்டிய அரசு.. வரதட்சணையாக கேட்கப் போவது என்ன..? அதிரடி திருப்பங்களுடன் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இதில் அதிரடித் திருப்பங்களும், விறுவிறுப்புக்களும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் "பசு புலித்தோலை போத்திகிட்டு புள்ள மேயுமா இதெல்லாம் குணசேகரனுக்காகவே எழுதுனது மாதிரி இருக்கு" என அப்பத்தா சொல்கிறார்.


இதனைத் தொடர்ந்து பின்னர் அரசு வீட்டுக்கு வந்திருக்க அவரிடம் விசாலாட்சி "இதை செய்யுங்க அதை செய்யுங்கன்னு சொன்னா தானே எங்களுக்கும் நல்லா இருக்கும்" என சொல்ல, "நாங்க நிச்சயதார்த்தத்தை கிராண்ட் ஆக செய்யுங்கள் என்று சொல்ல மாட்டோம், ஆனால்" என சொல்ல அரசு கூறுகின்றார்.


அதற்கு "அப்ப வேற என்ன சொல்ல போறீங்க" என கேள்வி எழுப்புகிறார் குணசேகரன். அனேகமாக அரசு கேட்கப் போவது அப்பத்தாவின் 40% ஷேராக இருக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்து வெளியாகும் எபிசோட்டில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement