• Sep 20 2024

சுந்தரியின் கணவரைப் பார்க்க வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் அனு- அதிர்ச்சியில் உறைந்த கார்த்திக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி . இந்த சீரியலில் சுந்தரிக்க குழந்தை பிறக்காது என்ற விஷயத்தை கார்த்திக் சுந்தரியின் அம்மாவிடம் சொன்னதால் அவர் பேச்சு இன்றி இருக்கின்றார். 

கார்த்திக் தான் சுந்தரியின் அம்மாவின் இந்த நிலைக்கு காரணம் என்று தெரிந்து கிருஷ்ணா கார்த்திக் மீது கோபமாக இருப்பதோடு சுந்தரிக்கும் கார்த்திக் செய்த தில்லாலங்கடி வேலை தெரிந்து விட்டது.

இப்படியான நிலையில் அனுவின் அம்மா அனுவிடம் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்பது உண்மையா என்று கேட்கிறார்.அதற்கு அனு எனக்கு என்னவோ அவளுடைய புருஷன் மேல தான் சந்தேகமாக இருக்கு என்று சொல்கின்றார். இதனை கார்த்திக் ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்.


பின்னர் சுந்தரியின் அம்மா அனுவைப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் கார்த்திக் இருக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement