பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள் புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி சீரியல் பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன.
அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கருமை நிறம் கொண்ட பாகுபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் அமைந்திருக்கின்றது. இதில் சுந்தரி என்ற பெண் அவளது கல்யாண வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டப்படுகிறது.
இந்நிலையில் இந்த சீரியலானது தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் சுந்தரியுடன் பேசிய பழைய நினைவுகளை நினைத்து பார்த்து தனது குழந்தையை சுந்தரியிடம் ஒப்படைத்து வெளியேற வேண்டும் என நினைக்கிறார்.
அதற்காக பாயசத்தில் தூக்க மாத்திரையை கலந்து அனைவருக்கும் பரிமாறி விட்டு இரவோடு இரவாக வீடடை விட்டு செல்கிறார் அனு.
காலையில் சுந்தரி எழுந்து அணுவை காணவில்லை என கூற அனைவரும் பதறுகிறார்கள்.பின்னர் அணு அனுப்பி வைத்த வீடியோவை பாக்கிறார்கள்.அதில் ''நான் குழந்தையை பெற்றிருக்கலாம் ஆனால் சுந்தரி தான் உண்மையான அம்மா''என அணு கூறும் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைகிறரக்ள்.
Listen News!