சின்னத்திரையில் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சன்டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதோடு டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் டாப் 5ல் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் இந் நாடகத்தில் சுந்தரி எனும் பெண் பல போராட்டங்களை சந்தித்து வருகின்றார்.அதில் சுந்திரியின் கணவர் அனுவை இரண்டாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.இந்த உண்மை அணுவை தவிர மற்ற எல்லோருக்குமே தெரிந்து விட்டது.
அனுவிற்கு எப்போது தெரிய வரும் என ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டு இருக்கையில் தற்போது ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் சுந்தரி தனது ஆண் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருக்க அவர்களை மறித்து இறங்கு கீழே..என அசிங்கமாக பல கேள்வி கேட்கின்றார் கார்த்திக்.இதனை பொறுத்துக்கொள்ளாத சுந்தரி கீழே இறங்கி பளார் என கன்னத்தில் அறைந்து விடுகின்றார்.
இதை எல்லாம் அனு பார்த்துக்கொண்டு இருந்து விட்டு உடனே கார்த்திக்கிடம் கேள்வி கேட்கின்றார்.யார்கிட்ட பேசிட்டு இருந்தாய் எனக் கேட்க கார்த்திக் யார்கிட்டையும் இல்லை எனக் கூறுகின்றார்.கோபமடைந்த அனு...நீ சுந்தரிக்கிட்ட பேசிட்டு இருந்தததை நான் பார்த்தேன் எனக் கோபமாக சொல்கின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ முடிவடைகின்றது.இந்த உண்மைகள் அனுவிற்கு தெரிய வருமா..இல்லை வழமை போல் ஏதாவது மறைக்கப்படுமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!