• Sep 20 2024

நயன்தாராவை போல் மாறிய அனுபமா…திரைத்துறையிலிருந்து எழுந்த எதிர்ப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் 2015-ஆம் ஆண்டில் வெளியான 'பிரேமம்' என்ற திரைப்படத்தின் வாயிலாக முதன் முதலில் மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிரபல்யமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் 2016-ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 'கொடி' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு தனுஷிற்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது தெலுங்கு மொழியில் உருவான 'கார்த்திகேயா 2' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்தப்படம் முதலில் ஜூலை 22இல் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் பின்னர் ஆகஸ்ட் 22-ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் தற்போது படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இப் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை. இதனால் பலரும் கடுங்கோபத்திற்கு உள்ளதோடு நயன்தாராவை போல மாறி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கான காரணம் யாதெனில் நயன்தாரா தனது பட ப்ரோமோஷன்களுக்கு வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயமே. இதனைத் தொடர்ந்து தற்போது அதே பாலிசியை அனுபமா எடுத்து இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டிருக்கின்றார். அதாவது தான் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் தான் 'கார்த்திகேயா 2' படத்தின் ப்ரோமோஷனுக்கு வர முடியாது எனக் கூறி இருக்கிறார். இவரின் இந்தப் பதிவு தற்போது ரசிகர்களினால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement