பிக் பாஸ் 6 நிகழ்ச்சி முடிவை நோக்கிச் செல்வதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை அழைத்து வந்து தங்க வைத்து, சண்டை போட வைத்திருக்கிறார்கள். ஒரே வீட்டில் தங்கியிருந்த போதிலும் அனைவரும் நட்பாக இல்லை. இந்நிலையில் தான் அவர்களுக்கு இடையே நட்பை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார் பிக் பாஸ்.
அதன்படி முதலாவதாக வெளியாகிய ப்ரோமோவில்நீங்கள் ஒரு நட்பை இந்த வீட்டில் வளர்க்காமல் விட்டுவிட்டோம் என்று நினைத்தால் ப்ரெண்ட்ஷிப் பேண்டை கட்டிவிட்டு ப்ரெண்ட்ஷிப்பை துவங்குங்கள் என்றார். இதையடுத்து ஆளாளுக்கு பேண்ட் கட்ட ஆரம்பித்தார்கள். யாரும் எதிர்பாராவிதமாக அசீமுக்கு ப்ரெண்ட்ஷிப் பேண்டை கட்டிவிட்டார் விஜே மகேஸ்வரி.
இதனை அடுத்து தற்பொழுது வெளியாகிய இரண்டாவது ப்ரோமோவில் ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் எனக்கு எதுவுமே தப்பா தெரியல நம்ம நட்பு வெளில போயும் தொடரனும் என்று சொல்லி பேண்ட் கட்டுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!