சமீபகாலமாக நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க செய்திகளை அவதூறு வார்த்தையில் பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டி பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். எம்ஜிஆர் முதல் தற்போதைய இளம் நடிகைகள் வரை விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அந்தவகையில் நடிகையும் டாக்டருமான ஷர்மிளா தன்னுடைய யூடியூப் சேனலில் சினிமா விமர்சகர் பிஸ்மியுடன் வீடியோ காலில் உரையாடியுள்ளார். மேலும் அதில் பயில்வான் ரங்கநாதன் பற்றி பிஸ்மியுடன் சேர்ந்து கேவலமாக உரையாடி உள்ளார்.
இதை கேள்விப்பட்ட பயில்வான் சமீபத்திய யூடியூப் பேச்சி ஷர்மிளாவை கண்டபடி வெளுத்து வாங்கிய பயில்வான் 3 திருமணம் செய்த நீயெல்லாம் பேச தகுதியில்லாதவள் என்று அசிங்கப்படுத்தியுள்ளார்.
அத்தோடு வலைப்பேச்சு பிஸ்மி என்னை ஒழுக்கமற்றவன் என்று கூறுவது எனக்கு சிரிப்பை தான் வரவழைக்கிறது. சக பத்திரிக்கையாளர்களை கேவளப்படுத்தி பேசக்கூடாது. இதுவரையில் நான் அப்படி பேசியதும் இல்லை.
ஆனால், இப்போது அமைதியாக இருக்கமுடியவில்லை என்று கூறியதுடன், ஒரு காலத்தில் ரோடுரோடாக பெயிண்ட் அடித்தவர் தான் பிஸ்மி. தெருதெருவாக சென்று பாட்டுப்புத்தகங்களை விற்பார் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தங்கையை காதலித்து திருமணம் செய்து துரத்திவிட்டவர் பிஸ்மி என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார் பயில்வான்.
மேலும் இப்படி இருக்கும் நீ என்னை ஒழுக்கமற்றவன் என்று கூறுவதா என்று கடுமையாக தாக்கி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
Listen News!