• Sep 21 2024

பாடகர் பம்மா பாக்கியாவின் பூத உடலுக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்திய ஏ.ஆர் ரகுமான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது வசீகரிக்கும் குரலால் முதலில் மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தவர் தான் பம்பர் பாக்யா. இதனைத் தொடர்ந்தே ஏ.ஆர் ரகுமான் இசையில் இவருக்கு பாட வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்ற பாடலை முதன் முறையாக பாடி இருந்தார்.


பின்பு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ‘புள்ளினங்கா’ பாடலை பாடி அசத்தி இருந்தார்.அதன் பின்னர் ஏ.ஆர் ரகுமான் இசையில் பிகில் , சர்கார், சர்வம் தாளமயம், இரவின் நிழல் ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.


49 வயதான பம்பா பாக்யா திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் மரணமடைந்தார். இவருடைய இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நேரடியாக சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement