• Sep 20 2024

அர்ச்சனா எப்போதும் உறுதியாக இருங்க- தன்னுடைய ஆதரவைத் தெரிவித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்

stella / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை விட, 7-ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீடு, ஸ்மோல் ஹவுஸ் என இரண்டு பிரிவாக போட்டியாளர்கள் பிரிந்திருப்பதால் இரு பிரிவாக சண்டையிட்டு வருகின்றார்கள்.இறுதியாக அன்னபாரதி வெளியேறியிருந்தார்.

இவருக்கு முதல் பிரதீப் ரெட்காட் கொடுக்கப்பட்டு வௌியேற்றப்பட்டார்.இதனால் சோஷியல் மீடியாக்களில் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவிதது வருகின்றனர்.


பிரதீப் ஆண்டனியை வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா - பூர்ணிமா கேங் புகார் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர். அது பற்றி தற்போது நெட்டிசன்கள் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களையும் டரோல் செய்து வருகின்றனர்.

மாயா - பூர்ணிமா டீமுக்கு எதிராக தற்போது அர்ச்சனா களமிறங்கி இருக்கிறார். அதனால் அவருக்கு நாளுக்கு நாள் வெளியில் ஆதரவு கூடி வருகிறது.இந்நிலையில் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்களும் தமது ஆதரவைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement