பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும் விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ்
நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால், ஆறுசீசன்களை முடிந்து ஏழாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்பெஷலே உலக நாயகன் கமல்ஹாசன் தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் போதும், சாட்டையை எடுத்து போட்டியாளர்களை வெளுத்து வாங்கிவிடுவார். இதனால் மற்ற நாட்களில் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட வார இறுதி நாட்களில் தொலைக்காட்சி முன் ஆஜராகிவிடுவார்கள்.
ஆறு சீசன்களை இதுவரை தொகுத்து வழங்கி கமல், 7வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது, போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.வரும் அக்டோபர் 1ம் தேதி ஞாயிறு அன்று பிக் பாஸ் ஷோவின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்கும் என ஆரம்பத்திலேயே ப்ரோமோவில் கமல் அறிவித்துவிட்டார். அதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம் இருக்கிறது.இந்நிலையில் தற்போது ஜிபி முத்து கடிதம் படிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இரண்டு பிக் பாஸ் வீடு இருந்தால் கமல் சனிக்கிழமை ஒரு வீட்டில் பேசிவிட்டு ஞாயிற்றுக்கிழமை இன்னொரு வீட்டில் பேசுவாரா என கேட்டிருக்கிறார்.மேலும் இந்த சீசன் இரண்டு டைட்டில் வின்னர் இருப்பார்களா என்றும் காமெடியாக ஜிபி முத்து கேட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!