தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பல கலைஞர்கள் உருவாகி இன்று உலகத்தையே தம் கைக்குள் உள்ளடக்கும் விதத்தில் தமது திறமையினால் உயர்ந்து இருக்கின்றார்கள். உழைப்பதற்கு வழி எதுவும் இல்லாமல் இருந்தவர்கள் கூட சினிமாவில் நுழைந்து வாழ்க்கையில் முன்னேறி இருக்கின்றார்கள்.
இந்தவகையில் சூர்யா, விஜய், அஜித், ரஜினி, கமல் எனப் பலரும் முன்னணி நடிகர்களாக மாறி சினிமாவின் உச்சத்திற்கு உயர்ந்து வருகின்றனர். இதனாலோ என்னவோ தெரியவில்லை தெலுங்குத் தயாரிப்பாளர்கள் பலரும் தமிழ் நடிகர்களைக் சமீபகாலமாக குறி வைத்து வருகின்றனர்.
இதில் நடிகர் விஜய்யை எடுத்துக் கொண்டால் இவர் நடிப்பிற்கும் நடனத்திற்கும் என்றே பேர் போன ஒருவர். இவரின் திரைப்படங்களின் டைட்டில் கூட மாஸாகத் தான் இருக்கும். இந்த நிலையில் விஜய் 'வாரிசு' படத்தின் மூலம் தற்போது தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கின்றார். இவரைத் தொடர்ந்து பிரபல ஹீரோக்களான தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரும் தெலுங்கில் நடித்து வருகின்றார்கள்.
இவர்களின் வரிசையில் தற்போது நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதாவது தமிழில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்ற இவர் தெலுங்குப் படத்தில் நடிப்பதற்கும் தயாராகியுள்ளாராம். இவர் நடிக்கவுள்ள இந்தப் படத்தை சௌர்யம் சிவா என்பவர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவரோடு இணைந்து வம்சி மற்றும் பிரேமாத் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
தமிழ் சினிமாவிற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வந்த சூர்யா திடீரென தெலுங்குப் பக்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் அதிகளவு சம்பளம் கிடைக்கும் என்பதால் தான் இவர் இந்த முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தயாரிப்பாளர்கள் இவ்வாறு தமிழ் ஹீரோக்களை குறி வைத்தால் தமிழ் தயாரிப்பாளர்களின் நிலை என்ன ஆவது? எனவும் ஒரு சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
பிற செய்திகள்
- “அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும்”; தமிழக அரசை கிண்டலடித்த நடிகை கஸ்தூரி..வைரலாகும் ட்விட்டர் பதிவு
- கொஞ்சம் ஓவரா தான் போறாங்க…படு கவர்ச்சி உடையில் அமலா பால்…வெளியான புகைப்படங்கள்..!
- பிரபல நடிகை கர்ப்பமாக இருக்கின்றாரா..? குழப்பத்தை கிளப்பிய நெட்டிசன்கள்..! காரணம் இதுவா..?
- கவர்ச்சி உடையில் ரசிகர்களைக் கவரும் ஐஸ்வர்யா மேனன்…வெளியான புகைப்படங்கள்..!என்னம்மா இப்பிடிப் பண்றீங்களே..?
- விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் 3 லட்ச ரூபாய் கேட்டாரா?..பார்த்திபனின் பரபரப்பு குற்றச்சாட்டு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!