தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக இருப்பவர் தான் சரத்குமார்.இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகங்களை கொண்டு இருக்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். அத்தோடு இந்த மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இது தவிர விளம்பரங்களிலும் நடித்து வரும் இவர் ரம்மி சூதாட்ட விளம்பரத்திற்கு ஆதரவாகப் பேசி இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்ட வருகின்றது. அதில் அவர் கூறியதாவது எல்லோரும் லட்சக்கணக்கில் கிரெடிட் கார்டை வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறீர்களா? இல்லை எல்லோரும் நான் விளம்பரத்தில் நடித்ததினால் தான் வீடு வாசலை இழக்கிறீர்களா? நான் சொல்றதுக்காக தான் விளையாடுகிறீர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
கெட்டுப் போகிறவன் என்று நினைத்தால் அவன் எப்படி இருந்தாலும் கெட்டுதான் போவான். விடுமுறை நாட்களில் மரத்தடியில் ஆங்காங்கே சீட்டுக்கட்டுகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அங்கேயும் சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
தடை செய்ய வேண்டும் என்றால் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தை அமல்படுத்தி அதற்கு பிறகும் நான் தான் காரணம் என்று சொன்னால் ஏற்று கொள்கிறேன். நீங்கள் என்னை ban பண்ண சொல்லலாம். நீங்களாக கெட்டுப் போவதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல என்று ரம்மி சர்க்கிள் விளம்பரத்தில் நடித்தது குறித்து சரத்குமார் பேசி இருக்கும் சர்ச்சை பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்திருக்கின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!