அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சென்னை நீலாங்கரையில் நடைபெறு வரும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் நிகழ்வின் ஆரம்பத்தில் மேடைக்கு வருகை தந்த விஜய் உடனடியாக மேடையிலிருந்து இறங்கி அங்கிருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர்களுடன் உரையாடினார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரமிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Listen News!