• Sep 20 2024

யாரடி நீ மோகினி சீரியலின் சீசன் 2 வருகிறதா?- மீண்டும் ஒன்று சேர்ந்த முத்தரசு மற்றும் சுவேதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் ஹீரோவாக ஸ்ரீகுமாரும், வில்லியாக சைத்ரா ரெட்டியும் அசத்தியிருந்தனர். அதிலும் சைத்ரா ரெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ரசிகர்களின் ஆதரவோடு ஒளிபரப்பாகிய இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து , இந்த சீரியலில் நடித்த நடிகர், நடிகைகள் பலரும் வேற சேனலில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஸ்வேதாவாக நடித்த சைத்ரா ரெட்டி சன் டிவி கயல் சீரியலில் லீட் ரோலில் நடிக்கிறார்.

வெண்ணிலா கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் சீரியலில் நடிக்கிறார். முத்தரசுவாக நடித்த ஸ்ரீ, சன் டிவி வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார்.இப்படி இருக்கையில், இந்நிலையில் சைத்ரா ரெட்டியும், ஸ்ரீகுமாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைபார்த்துவிட்டு இருவரும் புது சீரியலில் நடிக்கிறார்களா? அல்லது யாரடி நீ மோகினி சீசன் 2 வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் எந்த புதிய சீரியலிலும் சேர்ந்து நடிக்கவில்லை. வானத்தை போல சீரியலில் வரப்போகும் திருமண எபிசோடு காட்சியில் சைத்ரா ரெட்டி கெஸ்ட் என்ட்ரி கொடுக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement