சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது வெள்ளத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் இறுதியாக அருண் விஜய் இயக்கத்தில் வெளியான யானை திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்தப் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாபியா,என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தற்பொழுது ருத்ரன், திருச்சிற்றம்பலம் , குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவரிடம் சின்னத்திரை சினிமா பிரபலம் ஒருவர் ராத்திரி வேறு எங்கேயாவது போகிறாயா ..? என்பது போல தப்பாக கேட்டாராம் இதனை இரவின் நிழல் படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா நாயர் சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய ரேகா நாயர் ” பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்த போது ஒருத்தர் ராத்திரி வேறு எங்கேயாவது போகிறாயா ..? என்று கேட்டார். அதையெல்லாம் சகிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னிடம் அப்படி யாராவது கேட்டிருந்தால், செருப்பால அடித்திருப்பேன்” என்று பேசியுள்ளார். இதனால் பிரியா பவானி ஷங்கரை வம்புக்கு இழுப்பதாக அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அதர்வா பட இயக்குநரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்- அடடே இது தான் காரணமா?
- சீரியலில் மட்டும் தான் இந்த அடக்க ஒடுக்கமா?- முத்தழகு சீரியல் கதாநாயகியை மாடர்ன் உடையில் பார்த்திருக்கின்றீர்களா?
- முக்கிய பிரபலத்தை திடீரென சந்தித்த குக்வித் கோமாளி செஃப் வெங்கஷேட் பட்
- இயக்குநரால் இழுபட்டுக் கொண்டே போகும் கோப்ரா திரைப்படம்- ரெட் ஜெயன்ட் மூவிஸ் எடுத்த அதிரடி முடிவு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!