தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சததிரமாக அறிமுகமாகியவர் தான் நேஹா மேனன். கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னையில் தான் வாழ்ந்த வருகின்றார்.
அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்தார்.திரைப்படங்களிலும் நேஹா மேனன் நடித்துள்ளார்.
சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தில் நடித்திருந்தார்.இது தவிர தற்பொழுது விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகளான இனியா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கின்றது. இந்த நிலையில் இவர் விஞ்ஞானப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!