• Sep 20 2024

'சமந்தாவுக்கு நோய் வர காரணமே நீ தானே'?.. பயில்வான் கேட்ட கேள்வியால் அப்செட்டான விஜய் தேவரகொண்டா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து தொடர்ந்து அத்துமீறி பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் ஒரே ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினர் என்றும் தற்போது இருவரும் தான் காதலித்து வருகின்றனர் என்றெல்லாம் பேசி காட்டுத்தீ போல் பரபரப்பை  ஏற்படுத்தினார்.


இந்நிலையில், டோலிவுட்டில் குஷி படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய் தேவரகொண்டாவுடன் ஸ்டேஜிலேயே அப்படியொரு ரொமான்ஸ் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் குஷி படத்திற்கு வரவழைக்கும் வேலையை கச்சிதமாக செய்து விட்டு அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டார் சமந்தா.


குஷி படத்தில் சமந்தா நோய் பாதிப்பு அடைந்த நிலையில், நடித்தாரா? அல்லது அதற்கு முன்னதாக நடித்தாரா என பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்ப, அதுவரை ஜாலியாக சிரித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த விஜய் தேவரகொண்டா, பயில்வான் கேள்வியால் அப்செட் ஆனார்.


சமந்தா நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாக 60 சதவீதம் படப்பிடிப்பை நடத்தினோம். அவர் அந்த பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தான் மீண்டும் 40 சதவீத படப்பிடிப்பை நடத்தினோம் என பயில்வான் கேள்விக்கு பதிலளித்தார்.


அந்த கேள்விக்கு விஜய் தேவரகொண்டா பதில் அளித்த நிலையில், சமந்தாவுக்கு நோய் வரவே நீங்க தான் காரணம் என பயில்வான் குண்டை தூக்கிப் போட விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை. அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சி இத்துடன் முடிந்து விட்டது என அறிவித்து விஜய் தேவரகொண்டாவை அழைத்துச் சென்றனர்.


விஜய் தேவரகொண்டாவின் முகத்துக்கு நேராகவே சமந்தா இப்படியாக நீங்க தான் காரணம் என பயில்வான் ரங்கநாதன் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement