தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாக உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது இவரது கைவசம் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் என ஏராளமான படங்கள் உள்ளன.இவரின் டிரைவர் ஜமுனா திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை கிங்ஸ்லின் இயக்கி உள்ளார். இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற நவம்பர் 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் பிரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக அவரிடம், “நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது : “இதென்ன வம்பா இருக்கு. நான் எதையும் பிளான் பண்ணி பண்ணல. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். ஹீரோ வேண்டாம்னு நான் முடிவு பண்ணி நடிக்கல. நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அவ்வாறு நடித்து வருகிறேன். லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் நான் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.
Listen News!