விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் கோதைக்கு அர்ஜுன் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இதனால் கோதை எப்படி அர்ஜுன் பற்றிய உண்மைகளைக் கண்டு பிடிக்கப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ராகினி கோதையிடம் சென்று நீங்க அர்ஜுன் குடும்பத்தை நடத்திற விதமே சரியில்லை. எங்களுக்கு அண்ணா நகர்ல ஒரு வீடு இருக்கு தானே அதை எனக்கு எழுதிக் கொடுங்க என்று சொல்ல கோதை அதிர்ச்சியடைகின்றார்.
பின்னர் அந்த வீட்டை ராகினிக்கு எழுதித் தருவதாகச் சொல்லி ரிஜிஸ்டேசன் ஆபிசுக்குச் செல்கின்றனர்.அங்கே தமிழ் புதுக்கம்பனியை தன்னுடைய பெயரில் எழுத வருகின்றார். அப்போது ராகினிக்கு வீட்டை எழுதிக் கொடுப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.
பின்னர் சரஸ்வதி கோதையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பின்னர் கம்பெனியை வாங்கச் செல்கின்றார்.தமிழையும் சரஸ்வதியையும் தமிழ் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!