விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ராகினியின் திருமண நாளன்று கோதைக்கு அர்ஜுன் பற்றிய உண்மைகள் தெரிந்ததோடு தமிழ் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதும் தெரிந்து விட்டது.
மேலும் அர்ஜுன் கோதையின் சொத்துக்களை எல்லாம் ராகினியின் பெயருக்கு மாற்றி அபகரிதது விட்டதால் கோதை குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி என்ன செய்வதென்று தெரியாமல் கோவிலில் காத்திருந்தனர்.
பின்னர் தமிழ் சென்று தன்னுடைய வீட்டிற்கு கோதை மற்றும் எல்லோரையும் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் தமிழ் கோதை எப்போது மனம் திறந்து பேசுவார்கள் எப்போது இருவரும் ஒன்றாக இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இப்படியான நிலையில் கோதை தன்னுடைய மகன் தமிழ்,நமச்சி மற்றும் மருமக்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!