• Sep 20 2024

தமிழின் அடி தாங்க முடியாமல் ஓடிய அர்ஜுன்- ராகினியை மோசமாகத் திட்டி அனுப்பிய நடேசன்- கோதை எடுத்த முடிவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அபி, தன்னை ராகினி கண்டு பேசியதாகவும் தன்னை அங்கு வந்து இருக்க சொன்னதாகவும் சொல்கின்றார். இதைக் கேட்ட நடேசன் நீ அங்க எல்லாம் போகக் கூடாது, அவ கிட்டை யாரும் பேசக் கூடாது என்கின்றார். பின்னர் சரஸ்வதி,வசு,நடேசன்,கோதை எல்லோரும் கோவிலுக்கு போகின்றனர். மறுபுறம் ராகினியும் அதே கோவிக்குப் போகின்றார்.


கோவிலில் ராகினி, தமிழ் அண்ணா தப்பே பண்ணல ஆனால் நான் அவர் மேல பழிபோட்டு எப்பிடி எல்லாம் திட்டி இருக்கிறேன். இப்போ அவர் முகத்தை என்னால பார்க்க கூட முடில, அம்மா அப்பா என்னைத் தனியாக விட்டிட்டு போவாங்க என்றே நினைக்கல அர்ஜுன் பக்கம் நியாயம் இருப்பதால் தான் அவருக்கு சர்ப்போட் பண்ணினேன் என கடவுளிடம் புலம்பி விட்டு வரும் போது கோதைதைய கண்டு வடுகின்றார்.

ராகினியைக் கண்ட கோதையும் ராகினியிடம் பேசப்போகின்றார், இதைப் பார்த்த நடேசன் இவ கிடட எதுக்கு பேசிற, கையில கழுத்தில போட்டிருக்கிற மிச்ச சொத்தையும் வாங்கிட்டு வா என்று அவன் சொல்லி இருப்பான். அதான் இவ வந்திருக்கிறா,இவளுடன் யாரும் பேசக்கூடாது,மேலும் ராகினியைப் பார்த்து உன்னை அன்டைக்கே தலை முழுகிட்டேன் எனக்கு இரண்டு பையன்கள் மட்டும் தான் என்று  திட்ட ராகினி அழுகின்றார்.


தொடர்ந்த தமிழும் நமச்சியும் அர்ஜுன் நண்பன் கூட நின்று பேச அங்கு அர்ஜுனும் அவரது மாமாவும் வந்து தமிழை வம்புக்கு இழுக்கின்றனர். இதனால் தமிழ் நமச்சிடம் பைக்ல ஏறுடா போகலாம் என்று சொல்கின்றார். இருந்தாலும் தமிழைப் போகவிடாமல் அர்ஜுனின் மாமா கோதை பற்றி தவறாகப் பேசுகினன்றார்.

தகரக் கொட்டிலுக்க எப்பிடி எல்லாரையும் வைச்சிருக்கிறீங்க, சொத்து எல்லாத்தையும் இழந்திட்டு பிச்சைக்காரங்க மாதிரி கோதையம்மா போனது தான் நல்லா இருந்திச்சு என்று பேச தமிழ் அர்ஜுன் மாமாவையும் அர்ஜுனையும் வெளுத்து வாங்குகின்றார். தமிழின் அடி தாங்க முடியாமல் அர்ஜுன் ஓடுகின்றார். தொடர்ந்து இதனை வந்து நமச்சி வீட்டில் சொல்கின்றார்.


அப்போது சரஸ்வதி எதற்காக அடிச்சீங்க பொறுமையா இருந்திருக்கலாம் தானே என்கின்றார். மறுபுறம் ராகினி கோவிலில் பேச வந்த விஷயத்தையும் சரஸ்வதி சொல்ல அவ கிட்ட என்ன பேச்சு உனக்கு என்று தமிழ் திட்டுகின்றார். அத்தோடு ராகினி தனியாக இருக்கிறாளே என்று கோதை பீல் பண்ண கார்த்திக் இது அவளாவே தேடிக்கிட்டது தானே அவளைப் பற்றி எதுக்கு பேசனும். நம்ம சொத்தை எப்பிடி மீட்பது என்று பார்ப்போம் என்கின்றார். பின்னர் எல்லோரும் போனதும் கேதையும் சரஸ்வதியும் அபியை ராகினியுடன் போய் இருக்க சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement