• Sep 19 2024

கோதை குடும்பத்தினரிடம் அவமானப்பட்டு நின்ற அர்ஜுன்- விழப்போன ராகினியை தாங்கிப்பிடித்த கோதை- கோபத்தில் நடேசன்- Thamizhum Saraswathiyum Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் கட்ட வேண்டிய 40 லட்சம் ரூபா பணத்தை சின்னக்கம்பனி முதலாளிகள் சேர்ந்து கட்டியதோடு அவர்கள் தமிழ் வீட்டுக்கு வந்து நீங்க எங்களுக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறீங்க உங்க கஷ்டத்தில நான் எப்பிடி பங்குகொள்ளாமல் இருக்க முடியும் என்று அவர்கள் சொல்ல தமிழ் வீட்டுக்காரர்கள் எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.


தொடர்ந்து அர்ஜுனும் அங்கு நிற்க சரஸ்வதி இப்போ பேசுடா, என்ன அமைதியாகிட்ட என்று நக்கலடிக்க, பதிலுக்கு கோதையும் ஒரே கெட்டவங்க மட்டமே ஜெயிச்சிட்டு இருப்பாங்க என்று நினக்காத, நல்லவங்கள கடவுள் எப்போதும் கைவிடமாட்டார் என்று சொல்ல தமிழும் அர்ஜுனைத் திட்டி அனுப்புகின்றார்.

தொடரந்து காலையில் ராகினி அர்ஜுனின் அக்காவுடன் வாக்கிங் போகின்றார். அப்போது நடேசனும் கோதையும் அவ்வழியாக வர ராகினி கண்டு கொள்ளாதது போலபோகும் போது கால் சறுக்கி விழப் பார்க்கின்றார். அப்போது கோதை ஓடிச் சென்று ராகினியைப் பிடிக்க,ராகினி நான் தான் வேணாம் என்று மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க தானே அப்புறம் எதுக்கு வாறீங்க என்று திட்டி அனுப்புகின்றார்.


இதைப் பார்த்த நடேசன் அவ தான் தெரியாத மாதிரி போனாள்ல அப்புறம் எதுக்கு நீ அங்க போன எனத் திட்டுகின்றார். தொடர்ந்து இருவரும் ஜோசியரைப் பார்க்கச் செல்கின்றனர். அப்போது அவர்கள் தமிழுக்கு நல்லது நடக்கப்போகின்றது. ஆனால் உங்க பொண்ணுங்கு பிரசவ காலம் நெருங்குவதால் அவங்க தான் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றார்.

மறுபுறம் பணம் கட்டியும் மிசினுகள் எதுவும் ரெடியாகாததால் வேலை இன்னும் தொடங்கவில்லை, வேலை தொடங்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கார்த்தி சொன்னதால் தமிழ் என்ன செய்வதென்று யோசிக்கின்றார். அப்போது உமாபதி வந்து ஒரு ஐடியா சொல்கின்றார். ஒருவருடைய கம்பெனி சும்மா தான் இருக்கு, ஒரு வாரத்திற்கு மட்டும் ட்ரெண்டுக்கு எடுத்து ஆடர் எல்லாத்தையும் பண்ணுவோம் என்று சொல்கின்றார்.


அப்போது தமிழ் நல்ல ஐடியாவாக இருக்கே என்று சொல்ல, ஆனால் அவரை பாரின்ல தான் போய் பார்க்கனும் என்று சொல்ல, தமிழும் போய் பார்க்கிறேன் என்கின்றார். பின்னர் ராகினிககு போன் செய்து உடம்பை பார்த்துக்கோ, மாடிப்படி ஏறாத என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார் கோதை, இருந்தாலும் ராகினி பதிலுக்கு கோதையை திட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement