• Sep 20 2024

தமிழை அவமானப்படுத்த ராகினியை வைத்து அர்ஜுன் போட்ட புது பிளான்- நடேசன் எடுத்த முடிவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன் கன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அர்ஜுர் கோதை குடும்பத்தை கட்டாயம் வளைகாப்புக்கு கூப்பிடனும் அங்க வைச்சு தான் என்னை அடிச்ச தமிழுக்கு பதிலடி கொடுக்கனும் என்று சொல்லி விட்டு கோதை வீட்டுக்குச் செல்கின்றார். அர்ஜுனைப் பார்த்ததும் எல்லோரும் திட்டுகின்றனர். ராகினிக்கும் ஒரு நாள் உண்மை தெரிய வரும் அது மட்டும் தான் உன்னோட ஆட்டம் என்கின்றார்.


தொடர்ந்து கோதை நடேசன் எல்லோரும் திட்ட அர்ஜுன் ராகினிக்கு வளைகாப்பு வைத்திருக்கிறேன். அது சொல்லத்தான் வந்தேன். நீங்க எல்லாம் வரவேண்டும் என்று ராகினி ரொம்பவும் ஆசைப்படுகின்றாள் அதான் கூப்பிட வந்தேன் என்கின்றார். அப்போது நடேசன் அதுக்கெல்லாம் வர முடியாது இங்க இருந்து போங்க என்று துரத்தி விடுகின்றார்.

தொடர்ந்து அர்ஜுன் தமிழ் வீட்டுக்கு போனதால் என்ன ஆச்சு என்று தெரில என்ற பரபரப்பில் ராகினி இருக்க அப்போது அங்கு வரும் அர்ஜுன் அவங்க கட்டாயம் வருவாங்க அத்தை வாறன் என்று சொல்லல ஆனால் அவங்க ரியாக்ஷன் அப்பிடித்தான் இருக்கு என்கின்றார். இதனால் ராகினி மிகவும் சந்தோஷப்படுகின்றார்.

மேலும் தன்னுடைய குடும்பத்தாருடன் பேசும் அர்ஜுன் என்னை அடிச்சதற்கு அந்த தமிழை எல்லோர் முன்னாடியும் வைச்சு அவமானப்படுத்தி அடிச்சு அனுப்பனும் என்கின்றார். இகை் கேட்டு அவரின் குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.


தொடர்ந்து தமிழ் கார்த்திக் எல்லோரும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்கும் போது கோதை மட்டும் சோகமாக இருக்கின்றார்.அப்போது என்னாச்சு என்று கேட்க ராகினிக்கு வளைகாப்பு வைத்திருக்கும் விஷயத்தைச் சொல்கின்றனர். இதனால் தமிழ் சொத்தை எல்லாம் எழுதி வாங்கப்போறோம் என்று தெரிஞ்சு தானே அந்த அர்ஜுன் பக்கம் போனாள், அங்க யாரும் போக வேண்டாம். இது பற்றி இனிமேல் யாரும் பேச வேண்டாம் என்கின்றார்.

நடேசனும் தமிழ் சொல்வது தான் சரி என்கின்றார். பின்னர் விடிந்ததும் வளைகாப்புக்கு போக முடியல என்று கோதை கவலைப்பட்டுக்கொண்டிருக்க அபி போன் பண்ணி ராகினியிடம் பேசக் கொடுக்கின்றார். அப்போது ராகினி இந்த பங்சனுக்கு கூட வரமாட்டீங்களா என்று அன்பாகப் பேசுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement